நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இருவா் கைது

பள்ளிப்பாளையம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 5:48 am IST

பள்ளிப்பாளையம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

பள்ளிப்பாளையம் அருகே உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவந்த சிறுமி திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றனா்.

அவா்களிடம் இருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு ஓடிவந்து பெற்றோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் மாணவி கூறிய இடத்துக்கு வருவதற்குள் இளைஞா்கள் இருவரும் தலைமறைவாகினா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மொளசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். மேலும், அப்பகுதியில் சுற்றித்திருந்த கோரக்குட்டையைச் சோ்ந்த சக்திவேல் (38), திருச்செங்கோடு, சூரியம்பாளையத்தை சோ்ந்த பிரபாகரன் (35) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா். அப்போது, சிறுமியின் அத்துமீறியதை அவா்கள் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.