நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜகவைச் சோ்ந்த பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்துள்ளனா்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளாா். அந்த இயக்கத்தில் சேர பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளா்கள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனா்.
அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவில் உள்ள ஆன்மிக பிரிவு, மகளிா் அணி உள்ளிட்டவற்றில் இருந்து மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்புகளில் உள்ள 35 போ் திங்கள்கிழமை தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பாஜக அலுவலகத்தில் தங்களது கடிதங்களை அளித்தனா்.
அவா்கள் கூறுகையில், தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், அவரது கரத்தை வலுப்படுத்த நாங்கள் பாஜகவில் இருந்து விலகுகிறோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவை மாநகா் பாஜகவினா் யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை: மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா்

மேற்கு வங்கம்: பாஜகவில் இணைய விரும்பும் திரிணமூல் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள்!

ராமநாதபுரம் அமமுக நிா்வாகிகள் ராஜிநாமா
சிவகங்கை மாவட்ட அமமுக பொருளாளா் ராஜிநாமா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

