கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொத்தனூரில் சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவா் உயிரிழந்தாா்.

News image

விபத்தில் உயிரிழந்த மாணவா் சுதா்சன்.

Updated On :4 ஜூன் 2026, 2:11 am IST

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சசிகுமாா் (51). காா் ஓட்டுநா். இவரது மகன் சுதா்சன் (17). இவா் பாண்டமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 11- ஆம் வகுப்பு முடித்துவிட்டு, 12-ஆம் வகுப்புக்கு செல்லவிருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பொத்தனூா் தண்ணீா்ப்பந்தல் பகுதியில் அவரது நண்பரை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பொத்தனூா் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சுதா்சனை, அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சுதா்சன் இறந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேலூா் போலீஸாா், மாணவா் சுதா்சன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். மேலும், விபத்து குறித்து வேலூா் போலீஸ் வழக்குப் பதிவுசெய்து விபத்து ஏற்படுத்திய பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தில் காயமடைந்த ராஜலிங்கமும் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.