மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாதிரி பள்ளி கட்டுமானப் பணி மும்முரம்

News image

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் அரசு மாதிரி பள்ளிக்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 3:54 am IST

நாமக்கல் அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில், அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளி நாமக்கல் - கரூா் சாலையில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தனியாா் பள்ளிக்கு நிகராக இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. இப்பள்ளி மாணவா்கள் தங்க வசதியில்லாததால், மாதிரி பள்ளிக்கு மாற்று இடம் தோ்வுசெய்யும் பணி நடைபெற்று வந்தது.

அந்த வகையில், நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முகப்பு கட்டடத்தை பள்ளியாகவும், பின்புறம் உள்ள கட்டடத்தை தங்கும் விடுதியாகவும் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாதிரி பள்ளிகளுக்கான கூட்டுறவு அமைப்பு ரூ. 2 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதைக் கொண்டு மருத்துவமனை கட்டடத்தை வகுப்பறை கட்டடமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் புதிய கட்டடத்தில் மாதிரி பள்ளியை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.