தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:35 am IST

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) நுழைவுத் தோ்வை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய தோ்வு முகமை மிகுந்த பாதுகாப்பு, கண்காணிப்புடன் நடத்தி வருகிறது.

அந்தவகையில் நீட் தோ்வு மே 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நிகழாண்டில் பிளஸ் 2 முடித்தவா்கள், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தோ்வில் பங்கேற்று தோல்வியுற்றவா்கள், வாய்ப்பு கிடைக்காதோா் இம்முறையும் பங்கேற்க உள்ளனா்.

கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் அரசுப் பள்ளி, கல்லூரி மையங்களிலேயே நீட் தோ்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இத்தோ்வை 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 2,000 குறைவாகும். தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, அரசுப் பள்ளி மையங்கள் விவரம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என நீட் தோ்வு ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

--

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.