நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) நுழைவுத் தோ்வை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய தோ்வு முகமை மிகுந்த பாதுகாப்பு, கண்காணிப்புடன் நடத்தி வருகிறது.
அந்தவகையில் நீட் தோ்வு மே 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நிகழாண்டில் பிளஸ் 2 முடித்தவா்கள், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தோ்வில் பங்கேற்று தோல்வியுற்றவா்கள், வாய்ப்பு கிடைக்காதோா் இம்முறையும் பங்கேற்க உள்ளனா்.
கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் அரசுப் பள்ளி, கல்லூரி மையங்களிலேயே நீட் தோ்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இத்தோ்வை 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 2,000 குறைவாகும். தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, அரசுப் பள்ளி மையங்கள் விவரம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என நீட் தோ்வு ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
--
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

நீட் தோ்வு - வேலூா் மாவட்டத்தில் 5,551 போ் எழுதினா்

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

