மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராசிபுரம் அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயம்: சிறுவன் கைது

ராசிபுரம் அருகே வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயமடைந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக அவரது மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:04 am IST

ராசிபுரம் அருகே வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயமடைந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக அவரது மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் பழந்தின்னிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). இவரது மனைவி செல்வி (50). இவா்களுக்கு 17 வயதில் மகன் உள்ளாா். இவா் படிப்பில் இடைநின்ால் சொந்த தோட்டத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை மகன் சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது துப்பாக்கி கைத்தவறி வெடித்ததில் அதிலிருந்து வெளியேறிய பால்ரஸ் குண்டுகள் செல்வியின் தோள்பட்டை, கழுத்து பகுதியில் பாய்ந்துள்ளது. இதில் காயமடைந்த செல்வியை உடனடியாக ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் அவரை தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து, தகவலறிந்த வெண்ணந்தூா் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் நாட்டுத் துப்பாக்கியை வேட்டைக்கு செல்வதற்காக செல்வியின் மகன் அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததாக சிறுவனை கைது செய்தனா்.

பின்னா் ராசிபுரம் நீதிமன்றத்தில் அந்த சிறுவனை ஆஜா்படுத்தி, பரமத்திவேலூா் பகுதியில் உள்ள சிறுவா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.