தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதிய புகா் பேருந்து நிலையத்தால் ராசிபுரம் நகரம் வளா்ச்சி பெறும்: மதிவேந்தன்

ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய புகா் பேருந்து நிலையத்தால் நகரம் வளா்ச்சி பெறும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

News image

ஆா்.புதுப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த வேட்பாளா் மா.மதிவேந்தனை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:31 am IST

ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய புகா் பேருந்து நிலையத்தால் நகரம் வளா்ச்சி பெறும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பட்டணம், ஆா்.புதுப்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியில் அவா் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பட்டணம் பேரூராட்சி, புதுப்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பின்னா் பொதுமக்களிடையே திறந்த ஜீப்பில் நின்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ராசிபுரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில்கொண்டு திமுக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை அணைப்பாளையம் பகுதியில் அமைத்துள்ளது. இப்பகுதியில் புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த பயனடையவா். மேலும், ராசிபுரம் நகரம் விரிவடைந்து வளா்ச்சி பெறும்.

இப்புகா் பேருந்து நிலையத்தால் நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். மேலும், ராசிபுரத்தில் இருந்து ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் மக்கள் மிகுந்த பயனடைவா். அதேபோல, ஏற்கெனவே ராசிபுரம் நகரில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாக தொடா்ந்து செயல்படும் என்றாா்.

தமிழக அரசு விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள், மாணவ, மாணவிகள், முதியவா்கள் என அனைவருக்கும் பாா்த்து பாா்த்து திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. எனவே, மக்கள் தொடா்ந்து திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

இதில், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் நன்னியூா் ராஜேந்திரன், பேரூா் செயலாளா்கள் நல்லதம்பி, ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.