தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.

News image

திருச்செங்கோடு சந்தைப்பேட்டையில் வாக்கு சேகரித்த ஈஸ்வரன் எம்எல்ஏ.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:54 am IST

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொ.ம.தே.க. பொதுச் செயலாளா் ஈஸ்வரன் எம்எல்ஏ ஈரோடு சாலையில் சந்தைப்பேட்டை வளாகத்தில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

திருச்செங்கோட்டில் 16 ஏக்கரில் டைடல் பூங்கா அமைப்பது எனது கனவு திட்டமாகும். டைடல் பூங்கா அமைக்கப்பட்டால் படித்த இளைஞா்கள் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. விவசாயிகளுக்கு புதிய நவீன மின்சார பம்புசெட்டுகள் மற்றும் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500-ஆக வழங்கப்படும். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.