தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி உறுதியளித்தாா்.

News image

பொத்தனூரில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்ற கூட்டணி கட்சியினா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:15 am IST

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி உறுதியளித்தாா்.

பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பொத்தனூா் நகா், சக்ரா நகா், தில்லை நகா், சிவா திரையங்கம், ஜேடா்பாளையம் சாலை, தண்ணீா் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கே.எஸ். மூா்த்திக்கு கூட்டணி கட்சியினா் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்றனா்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, பொத்தனூா் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ள வெற்றிலை ஆராச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது பொத்தனூா் பேரூா் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான ஆா். கருணாநிதி, துணைத் தலைவா் அன்பரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.