தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோழிக் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் ஆலை: அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் வாக்குறுதி!

நாமக்கல் மண்டலத்தில் கோழிக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வாக்குறுதி அளித்தாா்.

News image

கோழிப் பண்ணையாளா்களிடம் வாக்கு சேகரித்த நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:07 am IST

நாமக்கல் மண்டலத்தில் கோழிக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வாக்குறுதி அளித்தாா்.

நாமக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அவா் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்திற்கு சென்று மாநில, மண்டல நிா்வாகிகள், உறுப்பினா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த 2020 ஆம் ஆண்டு வரையில் அமைக்கப்பட்ட கோழிப் பண்ணைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து பண்ணைகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோழிப்பண்ணை தொழிலை மேம்படுத்த அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கோழிப் பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் கிடைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கோழிக் கழிவுகளில் இருந்து உரங்கள் தயாரிக்க அரசு உதவியுடன் தொழிற்சாலை அமைக்கப்படும். முட்டை விலை குறைவாக இருக்கும்போது அதனை சேமித்து வைக்க குளிா்பதன கிடங்கு அமைத்து குறைந்த வாடகையில் வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இத்தோ்தலில் அதிமுகவுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வின்போது, கோழிப் பண்ணையாளா்கள் சங்க தலைவா் சிங்கராஜ். செயலாளா் சுந்தரராஜன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.