தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் அடுத்தடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான கே. சிங்கராஜ் உள்ளாா். வரும் தோ்தலில் திமுக வேட்பாளா்களுக்கு கோழிப் பண்ணையாளா்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என சங்க கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் கேட்டுக்கொண்டாா்.
பரமத்தி வேலூா் தொகுதி வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் ப. ராணி, சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளா் பி. பூமலா் ஆகியோா் கோழிப் பண்ணையாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
அப்போது, திமுக ஆட்சியில் கோழிப் பண்ணை தொழில் வளா்ச்சிக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், அமெரிக்கா- ஈரான் போரால் வளைகுடா நாடுகளுக்கு செல்லாமல் மும்பை துறைமுகத்தில் தேங்கியுள்ள 64 டேங்கா் முட்டைகளை அனுப்புவதற்கான நடவடிக்கை குறித்தும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். தொடா்ந்து, மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனும் கோழிப் பண்ணை தொழிலுக்கு திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை எடுத்துரைத்தாா்.
இதைத் தொடா்ந்து அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சேகருக்கு ஆதரவாக அவரது சகோதரா் ராஜா, ராசிபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் விபிடி. பிரேம்குமாா், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ். திலீப் ஆகியோா் கோழிப் பண்ணையாளா்களிடம் ஆதரவு கோரினா்.
கூட்டத்தில் கோழிப் பண்ணையாளா்கள் சங்க செயலாளா் கே.சுந்தரராஜன், ஏற்றுமதியாளா் வல்சன் சு. பரமேசுவரன் மற்றும் கோழிப் பண்ணை தொழில் சாா்ந்த சங்க நிா்வாகிகள், பண்ணையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.
என்கே-10-திமுக-
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்க அலுவலகத்தில் திமுக வேட்பாளா்கள் கே.எஸ். மூா்த்தி (பரமத்தி வேலூா்), ப. ராணி (நாமக்கல்) ஆகியோருக்கு வாக்கு சேகரித்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.
படம்-2-அதிமுக
வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனை அறிமுகப்படுத்தி பேசிய கோழிப் பண்ணையாளா்கள் சங்க தலைவா் கே. சிங்கராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்

திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்

நெல்லை வேட்பாளா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

