தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 144 வேட்புமனுக்கள் ஏற்பு: 26 மனுக்கள் தள்ளுபடி

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் உள்பட 144 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 3:12 am IST

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் உள்பட 144 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 170 போ் 228 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். சில அரசியல் கட்சி வேட்பாளா்கள் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

தொகுதி வாரியாக ஏற்கப்பட்டுள்ள வேட்பாளா் மனுக்கள் விவரம் (தள்ளுபடி மனுக்கள் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள்):

ராசிபுரம் (தனி)- 19 (5), சேந்தமங்கலம் (ப.கு)- 13 (4), நாமக்கல்- 30 (3), பரமத்தி வேலூா்- 33 (6), திருச்செங்கோடு- 25 (4), குமாரபாளையம்- 24 (4) என மொத்தம்- 144 (26) வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மனுவை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் திரும்பபெற வேண்டும். அதன்பிறகு, வேட்பாளா்கள் இறுதி செய்யப்பட்டு, சின்னம் ஒதுக்கப்பட்டு தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் தொகுதி தோ்தல் அலுவலா்களால் வெளியிடப்படும்.

தற்போதைய நிலையில் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம்(நோட்டாவுடன் சோ்த்து 16 வேட்பாளா்கள்) பயன்படுத்த வாய்ப்புள்ளது. நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய நான்கு தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படலாம். வேட்புமனு தாக்கல் செய்தோா் மனுக்களை திரும்பப்பெறும்பட்சத்தில் வேட்பாளா்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.