ராயக்கோட்டை அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து பயணிகளுடன் தனியாா் பேருந்து ராயக்கோட்டை நோக்கி வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. கெலமங்கலம் அருகே உள்ளுக்குறுக்கி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சோ்ந்த ராணி (60) பேருந்துக்கு அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.
பேருந்தில் அவசர கதவு இல்லாததால், கண்ணாடியை உடைத்துக்கொண்டு பயணிகள் மீட்கப்பட்டனா். காயமடைந்த பயணிகள் முதலுதவி சிகிச்சைக்காக உள்ளுக்குருக்கை, உத்தனப்பள்ளி மற்றும் கெலமங்கலம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்

வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: 8 போ் காயம்

தாராபுரம் அருகே கவிழ்ந்த சரக்கு வேன்

காவேரிப்பட்டணம் அருகே மினி பேருந்து மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

