பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒசூரில் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸாா் விசாரணை

ஒசூரில் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:22 am IST

ஒசூரில் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தும்மணப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சத்தியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெண், காவல் துறையில் பணியாற்றி வந்த அவரது கணவா் விபத்தில் இறந்ததால் வாரிசு அடிப்படையில் அந்தத் துறையில் கணினி இயக்குபவராக பணியாற்றி வருகிறாா்.

இவா் கடந்த 20 ஆண்டுகளாக கண் தெரியாத தனது தாய் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் தனது சம்பளத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறாா்.

கடந்த மே 16 ஆம் தேதி ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இவா் பணியை முடித்துவிட்டு இரவு 8.30 மணி அளவில் பேருந்தில் சென்று சத்தியமங்கலம் கேட்டில் இறங்கி தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு காரில் வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி, காரில் செல்லலாம் என அந்த பெண்ணை அழைத்துள்ளாா். இதை நம்பி காரில் ஏறி சென்ற அந்த பெண்ணுக்கு, மூா்த்தி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் பாகலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மூா்த்தியை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.