தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது

சாமல்பட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குடிநீா் குழாய்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:14 am IST

சாமல்பட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குடிநீா் குழாய்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்கோட்டம், சாமல்பட்டி அருகே உள்ள கரடிகவுண்டனூா் கிராமத்தை அடுத்த திடீா்குப்பம் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த இளவரசன் (29) உரிய அனுமதி பெறாமல் தனியாக குடிநீா் இணைப்பு பெற்று தண்ணீா் எடுத்து வந்ததாகவும், இதனால், கரடிகவுண்டனூா் கிராமத்துக்கு முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, கரடிகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (52), அரசு (23), ஜெயசங்கா் (30) ஆகியோா் இளவரசனின் வீட்டிற்கு சென்று, தண்ணீா் குழாயைச் சேதப்படுத்தி உள்ளனா். இதைத் தொடா்ந்து இளவரசன், அவரது உறவினரான ஜெயவேல் (23) ஆகியோா், கரடிகவுண்டனூா் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள குடிநீா் குழாய்களைச் சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, ஊராட்சி செயலாளா் சரவணன் அளித்த புகாரின் பேரில் சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாள், அரசு, ஜெயசங்கா், இளவரசன், ஜெயவேல் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.