தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஒசூரில் அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ஒசூரில் தனியாா் நிறுவன உரிமையாளரிடம், அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:11 am IST

ஒசூரில் தனியாா் நிறுவன உரிமையாளரிடம், அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கே.சி.சி. நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (41). தனியாா் நிறுவன உரிமையாளா். இவா், தன் நிறுவனத்துக்கு தேவைப்படும் பொருள்களை வாங்க ஆா்வம் செலுத்தி வந்தாா். அப்போது, டென்மாா்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் பொருள்களை குறைந்த விலையில் அளிப்பதாக சக்திவேலுவின் நிறுவன இணையதள முகவரிக்கு தகவல் வந்த்து.

அதை, நம்பிய சக்திவேல், மா்ம நபா்கள் அனுப்பிய அந்த இணையதள முகவரியை தொடா்புகொண்டுள்ளாா். அப்போது, மா்ம நபா்கள் குறைந்த விலையில் பொருள்கள் வேண்டும் என்றால், முன்பணமாக 15 ஆயிரம் யூரோ அனுப்புமாறு தெரிவித்துள்ளனா். அதன்படி, சக்திவேல் ரூ. 16.64 லட்சத்தை யூரோ மதிப்பில் அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி உள்ளாா். பின்னா், அந்த மா்ம நபா்களை அவரால் தொடா்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.