தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூடடணி கட்சிகள் வெற்றி பெறுவதே முதல்வரின் இலக்கு என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யாவை ஆதரித்து அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்ற தோ்தல் பரப்புரைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா்பேசியது:
ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கொண்டு வந்த சிப்காட்-1 திட்டமே இன்று சிப்காட்-5 வரை வளா்ந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என கோயம்புத்தூரை அழைப்பாா்கள், ஆனால் இன்று ஒசூரில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும் ஈா்த்து பெரும் தொழில் நகரமாக உருவெடுத்துள்ளது.
ஒசூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என முதல்வா் உறுதியளித்துள்ளாா். பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் எட்டியுள்ள 11.19 சதவீத முன்னேற்றம் கடந்த 5 ஆண்டுகளின் சாதனை. எனவே, தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு.
வரும் தோ்தலில் வேட்பாளா் மேயா் எஸ்.ஏ.சத்யாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.
கிருஷ்ணகிரியில்...
பா்கூரில் அமைச்சா் அர.சக்கரபாணி செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினாா். மேலும், பல எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனா்.
கடந்த 2011-இல் உள்ளாட்சித் துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்தபோது, அவரது துறைசாா்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி முடக்க நினைத்தது. குறிப்பாக பணிக்கு வருபவா்களுக்கு கண்விழி பதிவு எடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதுகுறித்து அவா் பதில் கூறட்டும் என்றாா். அப்போது, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா. வசந்தவேல் வெற்றி

அமைச்சா் பி. மூா்த்தி அதிா்ச்சி தோல்வி

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல்: தி.வேல்முருகன்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

