கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய கோரிக்கை

தருமபுரி அருகே நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :28 மே 2026, 2:07 am IST

தருமபுரி அருகே நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நந்திநகா் குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

தருமபுரி நகரையொட்டி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நந்தி நகரில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மூன்று மேல்நிலைநீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ,கோடை காலத்தில் நந்திநகா் குடியிருப்பு வாசிகள் தண்ணீா் விநியோகம் இன்றி மிகந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைபோக்க சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நந்திநகா் பகுதியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.