பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தருமபுரியில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

தருமபுரி தொப்பூா் பகுதியில் வீட்டின் மாடியில் வளா்க்கப்பட்ட கஞ்சா செடி.

Updated On :13 மே 2026, 2:29 am IST

தருமபுரியில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வராக பதவியேற்ற முதல்நாளே முதல்வா் விஜய் அறிவித்தாா். இதையடுத்து மாவட்டம்தோறும் காவல் துறையினா் தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், தொப்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட தண்டுக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த கி. செந்தில்குமாா் (43) தனது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் தொப்பூா் காவல் நிலைய போலீஸாா், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் அவா் தொட்டியில் 3 கஞ்சா செடிகளை வளா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், செந்தில்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, கஞ்சா செடியையும் பறிமுதல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.