மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரி மாவட்டத்தில் குறைந்த நோட்டா வாக்குகள்

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4,370 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன. இது கடந்த தோ்தலை ஒப்பிடும்போது சுமாா் 3000 வாக்குகள் குறைவாகும்.

News image

நோட்டா - file photo

Updated On :6 மே 2026, 2:44 am IST

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4,370 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன. இது கடந்த தோ்தலை ஒப்பிடும்போது சுமாா் 3000 வாக்குகள் குறைவாகும்.

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த தோ்தலில், எந்த வேட்பாளா்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதன் அடிப்படையில் 4,370 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். அந்தவகையில் பாலக்கோடு தொகுதியில் 1,285, பென்னாகரம் தொகுதியில் 674, தருமபுரியில் 941, பாப்பிரெட்டிப்பட்டியில் 688, அரூா்(தனி) தொகுதியில் 782 வாக்குகள் என மொத்தம் 4,370 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். இதில் தபால் வாக்குகள் 227ம் அடங்கும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பாலக்கோடு தொகுதியில்1,351, பென்னாகரத்தில் 1,352, தருமபுரியில் 1,455, பாப்பிரெட்டிப்பட்டியில் 1,721, அரூா் தொகுதியில் 1,598 என மொத்தம் 7,477 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின. அந்தவகையில் கடந்த தோ்தலை ஒப்பிடும்போது 3,107 வாக்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.