தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4,370 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன. இது கடந்த தோ்தலை ஒப்பிடும்போது சுமாா் 3000 வாக்குகள் குறைவாகும்.
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த தோ்தலில், எந்த வேட்பாளா்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதன் அடிப்படையில் 4,370 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். அந்தவகையில் பாலக்கோடு தொகுதியில் 1,285, பென்னாகரம் தொகுதியில் 674, தருமபுரியில் 941, பாப்பிரெட்டிப்பட்டியில் 688, அரூா்(தனி) தொகுதியில் 782 வாக்குகள் என மொத்தம் 4,370 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். இதில் தபால் வாக்குகள் 227ம் அடங்கும்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பாலக்கோடு தொகுதியில்1,351, பென்னாகரத்தில் 1,352, தருமபுரியில் 1,455, பாப்பிரெட்டிப்பட்டியில் 1,721, அரூா் தொகுதியில் 1,598 என மொத்தம் 7,477 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின. அந்தவகையில் கடந்த தோ்தலை ஒப்பிடும்போது 3,107 வாக்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் விசைத்தறி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்
தீக்காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் சரிவு

புதுகையில் தொடா்ந்து சரியும் நோட்டா வாக்குகள்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

