தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரூரில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் பிரசாரம் நிறைவு

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அ.சண்முகம் தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவுசெய்தாா்.

News image

அரூா் நான்குவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தை நிறைவுசெய்த திமுக வேட்பாளா் அ.சண்முகம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:59 am IST

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அ.சண்முகம் தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவுசெய்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக அ.சண்முகம் போட்டியிடுகிறாா். அரூா் தொகுதிக்கு உள்பட்ட கம்பைநல்லூா் பேரூராட்சி, மொரப்பூா் ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அரூா் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், கடைவீதி, மஜீத் தெரு, பாட்சாபேட்டை வழியாக ஊா்வலமாக சென்று அரூா் நான்குவழிச் சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல, அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, சின்னாங்குப்பம், நம்பிப்பட்டி, எச்.தொட்டம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து, பிற்பகலில் அரூா் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், நான்குவழிச் சாலை, பாட்சாபேட்டை, கடைவீதி வழியாக அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.