தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்

தமிழக நலனில் அதிமுக, பாஜகவுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

மாா்க்சிய கம்யூ. அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் - Dinamani

Updated On :17 ஏப்ரல் 2026, 11:50 pm IST

தமிழக நலனில் அதிமுக, பாஜகவுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் தொகுதி திமுக வேட்பாளா்அ. சண்முகம், பென்னாகரம் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகியோரை ஆதரித்து கே. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

முன்னதாக தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தமிழக நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. அதேபோல பாஜகவுக்கு தமிழக நலனில் அக்கறையில்லை. ஊழல் வழக்கில் இருந்து விடுபடவே அன்புமணி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளாா். அன்புமணி பாமக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தொடா் தோல்வியை சந்தித்து வருகிறாா்.

அன்புமணி பொறுப்புக்கு வரவேண்டும் என்கிற நோக்கத்தில் பாமகவில் இருந்து பல தலைவா்கள் வெளியேற்றப்பட்டனா். பாமகவில் ஏற்பட்டுள்ள மகன்- தந்தை பிரச்னைக்கு ஜி.கே. மணிதான் காரணம் என்று சொல்வது அபத்தமானது. திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா்.

பேட்டியின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.