மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா், மூக்கனூா் அக்கமஅள்ளி ஆதிமூல பெருமாள், சாலை விநாயகா், குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி, அதியமான்கோட்டை காலபைரவா், கெரகோடஅள்ளி அஷ்டவராகியம்மன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:07 am IST

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி சாலை விநாயகா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு முத்தங்கி அலங்கார சேவை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல ஸ்ரீ அபய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், தங்க கவசம் சாத்தப்பட்டு உபகார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சா்வ அலங்காரத்தில் சுவாமி திருவீதிஉலா நடைபெற்றது.

இதேபோல சிவசக்தி விநாயகா் கோயில், ஸ்ரீ செல்வ கணபதி கோயில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், உழவா் தெரு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தருமபுரி கோட்டை வரமஹாலக்ஷ்மி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயிலில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகா்ஜுன சுவாமி கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், நெசவாளா் நகா் ஓம் சக்தி மாரியம்மன், மகாலிங்கேஸ்வரா் கோயில், வேல்முருகன் கோயில், எஸ்.வி. சாலை சுப்பிரமணிய சுவாமி கோயில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவா் கோயிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல மாவட்டத்தின் முக்கிய கோயில்களான தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில், பி. அக்ரகாரம் முனியப்பசுவாமி கோயில், மொரப்பூா் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோயல், பாலக்கோடு புதூா் மாரியம்மன் கோயில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரா் கோயில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரா் கோயில், மூக்கனூா் அக்கமனஅள்ளி ஆதிமூல பெருமாள் கோயில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.