மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாலக்கோடு தொகுதியில் தட்டுபாடின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும்

பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image

பைசுஅள்ளியில் வாக்கு சேகரித்த பாலக்கோடு திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:01 am IST

பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட, காரிமங்கலம் அண்ணாநகா், குரும்பா்க்கொட்டாய், மாட்லாம்பட்டி, பைசுஅள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

பாலக்கோடு தொகுதியில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் சமுதாயக் கூடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இத்தொகுதியில் நீண்ட காலம் நிலுவையிலுள்ள அலியாளம்- தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம், ஜொ்த்தலாவ்- புலிகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம், எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் ஆகிய நீா்ப்பானத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி விவசாயிகளின் கோரிக்கைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், பாலக்கோடு தொகுதி பாா்வையாளா் அரியப்பன், தொகுதி பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.