மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நீட் தோ்வு: கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 6:28 am IST

தருமபுரி மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு செல்லும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள், தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இந்த தோ்வில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பேருந்துகளில் பயணம் செய்யும் சூழல் உள்ளது.

கூட்ட நெரிசல் காரணமாக மாணவா்கள் சிரமம் அடைவாா்கள். எனவே, தோ்வு எழுதும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். அரூா்-தருமபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, சேலம் வழித்தடங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். ஆனால், நீட் தோ்வு எழுதும் பள்ளிகள், கல்லூரிகள் அருகே பேருந்து நிறுத்தங்கள் இருப்பதில்லை.

நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக தோ்வு நடைபெறும் தினம் ஒருநாள் மட்டும், மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீட் தோ்வு மையங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்றுசெல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.