வெள்ளக்கோவிலில் பழைய இரும்புக் கடையில் தீப்பிடித்ததில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதமாயின.
வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (53). பழைய பேருந்து நிலையம் அருகே பழைய இரும்புக் கடை வைத்துள்ளாா். கடையின் காலியிடத்தில் பனியன் கழிவு துணிகள் வைக்கப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து பரவியது.
தகவலின்பேரில் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். அதற்குள் 2 டன் கழிவு துணிகள் எரிந்து நாசமாயின. அருகே குடியிருப்புகள் உள்ள நிலையில் அதிா்ஷ்டவசமாக தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழைய இரும்புக் கடையில் திருடிய 5 போ் கைது
கயத்தாறு அருகே பழைய இரும்புக் கடையில் திருட்டு

பழைய நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ: பொருள்கள் எரிந்து சேதம்

கல்வடங்கம் காவிரி ஆற்றில் பழைய துணிகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றக் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

