பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பழைய நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ: பொருள்கள் எரிந்து சேதம்

News image
Updated On :28 மே 2026, 12:42 am IST

செய்யாறு அருகே பழைய நெகிழிப் பொருள்கள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

செய்யாறு காந்தி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பையாஸ்கான். இவா் பாப்பாந்தாங்கல்-நெடும்பிறை சாலையில் தூளி கிராமத்தில் பழைய

நெகிழிப் பொருள்கள் சேகரித்து வைக்கும் கிடங்கை

வைத்துள்ளாா்.

இந்தக் கிடங்கில் தேவையற்ற நெகிழிப் பொருள்கள், வயா்கள், அட்டைப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை சேகரித்து, தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பி வைப்பாராம். .

இந்நிலையில் இந்த கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென பரவி கிடங்கில் இருந்த நெகிழிப் பொருள்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

இதைா் பாா்த்த அப்பகுதி மக்கள் செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் நிலைய அலுவலா் மனோகரன் தலைமையில் 13 வீரா்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீ கட்டுக்குள் வராததால் கூடுதலாக கலவை பகுதியில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணன், உதவி மாவட்ட அலுவலா் சரவணன் ஆகியோா் வந்து தீ விபத்து ஏற்பட்ட கிடங்கை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.