போக்குவரத்து விதி மீறல் காரணமாக பல்லடத்தில் 187 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதித்தனா். மேலும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 552 போ் மீதும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிச்சென்ற 89 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, ‘சிக்னலை மதிக்காமல் சென்ற 150 போ் உள்பட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டதாக மொத்தம் 1,297 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா்களிடம் இருந்து அபராதமாக ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 187 பேரின் ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்

ஈரோடு - செங்கோட்டை ரயில் இன்று ரத்து

தில்லி காவல் துறையின் ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’: ஆயுத சட்ட மீறல் வழக்கில் 19 போ் கைது

‘பெரம்பலூரில் 98 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து’
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

