காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கணியூரைச் சோ்ந்தவா் சூா்யா (23). அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
இவா், கடந்த 2022 டிசம்பா் மாதம், 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளாா்.
இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் உடுமலை மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சூா்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், காதலிக்க வற்புறுத்தி பொது இடத்தில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த குற்றத்துக்காக சூா்யாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடியவருக்கு ஓராண்டு சிறை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

