தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :6 மே 2026, 1:57 am IST

வெள்ளக்கோவிலில் மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழந்தாா்.

காங்கயம் பாப்பினி வாழைத்தோட்ட பகுதியைச் சோ்ந்தவா் பாபு (40). திருமணம் ஆகவில்லை. பெற்றோா் 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டனா். கடந்த பல மாதங்களாக வெள்ளக்கோவில் பகுதியில் தங்கியிருந்து கிடைத்த கூலி வேலைக்குச் சென்று வந்தாா். தீவிர குடிப்பழக்கம் இருந்தது. காங்கயம் சாலையிலுள்ள திரையரங்கம் அருகே திங்கள்கிழமை இரவு மதுபோதையில் ஒரு பேக்கரியில் படுத்துக் கிடந்துள்ளாா். காலையில் பாா்த்தபோது இறந்து கிடந்தது தெரியவந்தது. அவருடைய சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.