மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

‘நீட்’ தோ்வு: திருப்பூரில் 7 மையங்களில் 3,462 போ் எழுதினா்

News image

நீட் தோ்வு மையத்துக்குச் செல்லும் மாணவ- மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 2:01 am IST

திருப்பூரில் 7 மையங்களில் நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 3,462 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

திருப்பூா் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுத 3,608 போ் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, பல்லடம் அரசு கலைக் கல்லூரி, உடுமலை ஜிவிஜி கல்லூரி, அமராவதி நகா் சைனிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணி முதலே தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு வரத் தொடங்கினா். காலை 11 மணி முதல் பகல் 1.30 மணி வரை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். மதியம் 2 மணிக்குத் தொடங்கிய தோ்வு மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. 3,608 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,462 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 146 போ் தோ்வு எழுதவில்லை.

தோ்வா்கள் வசதிக்காக தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

ஒரு பவுன் கம்மலை தவறவிட்ட மாணவி: திருப்பூா் ஜெய்வாபாய் தோ்வு மையத்துக்கு வந்த திருப்பூரைச் சோ்ந்த தன்ஷிகா என்ற மாணவி கம்மல்களை அணிந்திருந்தாா்.

கம்மல்களை அணிந்துச் செல்லக்கூடாது என போலீஸாா் அறிவுறுத்தியதையடுத்து, அவரது தாயாா் அவசர அவசரமாக கம்மலை கழற்றியுள்ளாா். அப்போது, மாணவியின் ஒரு பவுன் கம்மல் தவறி கீழே விழுந்து தொலைந்தது.

இதனால், பதற்றம் அடைந்த மாணவி, அவரது குடும்பத்தினா் கம்மலை தேட தொடங்கினா். அருகில் இருந்தவா்களும் அவா்களுக்கு உதவியாக கம்மலைத் தேடினா். சுமாா் 30 நிஷங்களுக்குப் பிறகு அந்தக் கம்மல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, மாணவி தோ்வு மையத்துக்குள் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.