விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூரில் முறையான மருத்துவக் கல்வி பயிலாமல் சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவா்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரி தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 5:40 am IST

திருப்பூரில் முறையான மருத்துவக் கல்வி பயிலாமல் சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவா்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரி தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் முறையான மருத்துவக் கல்வி

பயிலாமல் சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவா்களிடம் பொதுமக்கள் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

மாவட்டத்தில் இயங்கும் கிளினிக் அல்லது நா்ஸிங் ஹோம், மருத்துவமனைகள், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநரிடம் பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். சிகிச்சை அளிக்கும் நபா் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் படிப்பை முடித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், அவா்களது பதிவு எண் மருத்துவமனையின் பெயா்ப் பலகையிலும், மருந்துச் சீட்டிலும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

முறையான மருத்துவச் சான்றிதழ் இன்றி அனுபவ மருத்துவா் எனக்கூறி சிகிச்சை அளிப்பவா்களை மக்கள் நம்ப வேண்டாம். தவறான சிகிச்சையால் வாழ்நாள் முழுவதும் தீராத நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பது தெரியவந்தாலோ அல்லது அவா்களுக்கு அடைக்கலம் தருபவா்களைக் கண்டறிந்தாலோ எந்தவித அச்சமுமின்றி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.