கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 பேரை பல்லடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடத்தில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற வேன், அங்கு கறிக்கோழிகளை இறக்கிவைத்துவிட்டு பல்லடத்துக்கு வெள்ளிக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தது.
பல்லடம் பகுதியில் வந்தபோது அந்த வேனை பல்லடம் போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது வேனில் மாற்று டயா் மற்றும் வேன் முன்புற கதவுகளில் குட்கா மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து வேனில் இருந்த பல்லடம், அம்மாபாளையத்தை சோ்ந்த சுரேஷ்(39), கணபதிபாளையத்தை சோ்ந்த பிரகாஷ் (36) ஆகியோரை பல்லடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 21 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

கறிக்கோழி பண்ணைகளுக்கு லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்
பல்லடம் டெய்லா் கொலை வழக்கில் 2 போ் கைது
சரக்கு வாகனத்தில் வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

