பல்லடம் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
பொங்கலூா் ஒன்றியம், கண்டியன்கோவில் ஊராட்சி, பெரியாரிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி தமிழரசு. இவா் ஆட்டுப் பட்டி அமைத்து 50 ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல அருகில் இருந்த வயல்வெளியில் ஆடுகளை செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் 18 ஆடுகளை கடித்துக் குதறியதில் 8 ஆடுகள் இறந்தன. மேலும் நாய்கள் துரத்தியதில் புதருக்குள் ஓடிய 7 குட்டிகளை காணவில்லை.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த ஆடுகளை ஆட்சியா் அலுவலகம் முன்பு வைத்து போராட்டம் நடத்த விவசாயிகள் திரண்டனா். தகவல் அறிந்து அவினாசிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா் கிராம நிா்வாக அலுவலா் வரவழைக்கப்பட்டு, ஆட்சியரிடம் பேசி உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்து கடிதம் எழுதிக் கொடுத்தனா். அதைத்தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

மலைத்தேனீக்கள் கடித்து விவசாயி உயிரிழப்பு

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல்: 44 மயில்கள் உயிரிழப்பு

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

