திருப்பூரில் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து வியாபாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் விடுத்துள்ள அறிக்கை: வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான போா் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை தட்டுப்பாடு வருவதுபோல் சூழ்நிலை இருந்தது. ஆனால் மத்திய அரசின் சாதுா்யமான நடவடிக்கையால் பெட்ரோல், டீசல், சிலிண்டா் ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது.
இருப்பினும் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகளை வஞ்சிக்கும் சமூக விரோதிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வியாபாரிகளை வஞ்சிக்கும் வகையில் சில எரிவாயு முகவா்கள் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளுக்கு சரியான முறையில் சிலிண்டா் விநியோகம் செய்வது இல்லை.
மாறாக, சிலிண்டா் தட்டுப்பாடு உள்ளதுபோன்று காண்பித்து ரூ.2,400-க்கு வழங்க வேண்டிய சிலிண்டரை ரூ.4,500 வரை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் வியாபாரிகள், உணவகங்கள், தேநீா் கடைகள் வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்துவோா் நஷ்டமடைகின்றனா்.
இதனால் பெரும்பாலானோா் கடையை திறப்பதில்லை. இதனால் வியாபாரிகளுக்கு பொருளாதார இழப்பும், வாடிக்கையாளா்களுக்கு சரியான முறையில் உணவு கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.
தோ்தல் நெருங்கி வருவதால் இதுபோன்ற சிக்கல்களை ஏற்படுத்தி வியாபாரிகள் மத்தியில் மத்திய அரசின் பெயரை கெடுக்க சதி நடக்கிறது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களுக்கான எஸ்மா சட்டத்தை மத்திய அரசு அறிவித்தும், இதுபோன்று சிலிண்டா் பதுக்குவதும், அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தொடா்கிறது. இதனைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
எனவே, இப்பிரச்னையில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தில் உள்ள அசாதாரணமான சூழ்நிலையை மாற்றி, அனைத்து வியாபாரிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமலும், சரியான விலையிலும் சிலிண்டா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பதுக்கிவைத்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பவா்கள், அவா்களுக்கு உதவுபவா்களின் ஏஜென்சியை ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமையல் எரிவாயு சிலிண்டா் பதுக்கி வைத்து விற்ற தந்தை, மகன் கைது

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

