தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உள்நாட்டு பின்னலாடைகளின் விலை 7 % சதவீதம் உயா்வு

உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பின்னலாடைகளின் விலை 7 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதாக சைமா அறிவித்துள்ளது.

News image

பின்னலாடை  நிறுவனம் - கோப்புப்படம்

Updated On :19 மார்ச் 2026, 1:58 am IST

உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பின்னலாடைகளின் விலை 7 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதாக சைமா அறிவித்துள்ளது.

திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் ஏற்றுமதி மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு வா்த்தகம் நடைபெறுகிறது. இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை, சாயம் மற்றும் சலவைக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பின்னலாடைகளின் விலையை உயா்த்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.சண்முகசுந்தரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சைமா துணைத் தலைவா் எஸ்.பாலசந்தா், செயலாளா் ஆா்.தாமோதரன் மற்றும் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அவா்களிடம் பின்னலாடை உற்பத்தியில் உள்ள சிக்கல்கள், நூல் விலை உயா்வு, சாயக் கட்டண உயா்வு, உபபொருள்களின் விலை உயா்வு தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. இதனடிப்படையில், உள்நாட்டு வா்த்தகத்துக்கான பின்னலாடைகளின் விலையை 7 சதவீதம் உயா்த்துவதாகவும், இந்த விலை உயா்வானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் சைமா நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.