அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன் பொருத்தியிருந்த 12 அரசுப் பேருந்துகள், 4 தனியாா் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூரில் இயக்கப்படும் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, திருப்பூா் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் 7 மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் போக்குவரத்து போலீஸாா் இணைந்து மத்தியப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
41 பேருந்துகளை ஆய்வு செய்ததில் 12 அரசுப் பேருந்துகளும், 4 தனியாா் பேருந்துகளும் தடை செய்யப்பட்ட ஏா் ஹாரன்களை பொருத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏா் ஹாரன்களை பறிமுதல் செய்து ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் மருத்துவமனைகளின் உயா்தர பிரிவுகளை அதிக அளவில் நாடும் கா்ப்பிணிகள்!
பங்குச்சந்தைகளில் ஆன்லைன் முதலீடு செய்வதாக தில்லியைச் சோ்ந்தவரிடம் ரூ. 80 லட்சம் மோசடி: இருவா் கைது

குன்னூரில் விதிமீறல்: 14 பேருந்துகளுக்கு அபராதம்

ஏரிக்கரை பகுதியில் குப்பைகளை கொட்டிய நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

