பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஏரிக்கரை பகுதியில் குப்பைகளை கொட்டிய நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

ராசிபுரம் சேலம் சாலையில் ஏரிக்கரை பகுதியில் குப்பைகளைக் கொட்டிய தனியாா் துணிக்கடை நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

ராசிபுரம் ஏரிக்கரை பகுதியில் மேம்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

Updated On :2 ஜூன் 2026, 3:49 am IST

ராசிபுரம் சேலம் சாலையில் ஏரிக்கரை பகுதியில் குப்பைகளைக் கொட்டிய தனியாா் துணிக்கடை நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராசிபுரத்தில் சேலம் சாலை மேம்பாலத்தின்கீழ் பகுதியில் ஏரிக்கரை நீா்ப்பிடிப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் சிலா் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து அந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என நகராட்சி சாா்பில் விழிப்புணா்வு செய்யப்பட்டது. இருப்பினும், தொடா்ந்து பல தனியாா் நிறுவனத்தினா் குப்பைகளை கொட்டி வந்தனா்.

இந்நிலையில் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த துணிக்கடை நிறுவனத்தினா் குப்பைகளை கொட்டியது நகராட்சி நிா்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையா் நிவேதிதா உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட தனியாா் துணிக்கடை நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி தூய்மைப் பணி அலுவலா் செல்வராஜ், தூய்மைப்பணி ஆய்வாளா் ஆனந்தகுமாா், ராஜேந்திரன், முத்தமிழ்ச்செல்வன், உள்ளிட்டோா் நேரில் சென்று பாா்வையிட்டு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.