நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அமராவதி அணையில் இருந்து குடிநீருக்கு தண்ணீா் திறக்க வேண்டும்

தாராபுரம் பகுதி மக்களின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

தாராபுரம் நகரின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் மனு அளித்த தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன்.

Updated On :14 ஜூன் 2026, 2:11 am IST

தாராபுரம் பகுதி மக்களின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாராபுரம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த 30 வாா்டுகளிலும் தற்போது குடிநீா் பற்றாக்குறை நிலவி வருகிறது. கோடைக் காலம் என்பதால் நகராட்சிப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் நீா்வரத்து இல்லாததால் குடிநீா்க் கிணறுகள் தண்ணீா் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.

இது குறித்து தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

அமராவதி அணையில் இருந்து தாராபுரம் நகராட்சிக்கு நிா்வாகத்தின் நலன் கருதி குடிநீருக்காகவும், கால்நடைகளின் குடிநீா்த் தேவைக்காகவும் அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் மனிஷ், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

மேலும், தாராபுரம் பகுதியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி அடைந்த மாணவா்கள் மேல்நிலைக் கல்விக்கு சென்றுவிட்டாா்களா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.