பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

திருப்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 1:48 am IST

திருப்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி சங்கா் நாராயணன் பூஜைகளை

முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை 5 மணியளவில் கோயிலைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, உள்புறம் உள்ள மூலவா் சந்நிதியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டதுடன்,

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.