சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எல்ஆா்ஜி அரசு மகளிா் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 2,822 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் சராசரியாக 88.59 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. தோ்தல் முடிந்ததும் 8 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள் வேட்பாளா்கள், அவா்களின் பிரதிநிதிகள், தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய பாா்வையாளா்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கிடங்குக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதம் தங்கிய மத்திய பாதுகாப்புப் படைப்பிரிவு காவலா்கள், போலீஸாா் அடங்கிய 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் அந்தக் கிடங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நாளன்று போட்டியிடும் வேட்பாளா்கள், அவா்களின் பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய பாா்வையாளா்கள் முன்னிலையில் அந்த அறை திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அறையில் ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை தொகுதி இடைத்தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

