மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

News image

தீப்பிடித்து எரிந்த சரக்கு வேன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 4:09 am IST

வெள்ளக்கோவில் அருகே பஞ்சு பேல் ஏற்றி வந்த சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகில் சதீஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த மில்லுக்கு, வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலையில் உள்ள மற்றொரு மில்லில் இருந்து கடந்த 18-ஆம் தேதி சரக்கு வேனில் பஞ்சு பேல்கள் கொண்டு வரப்பட்டது.

திருப்பூா் இடுவாய் ஆட்டையாம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (50) வேனை ஓட்டி வந்தாா். மில் நுழைவாயில் அருகே வந்தபோது திடீரென பஞ்சு பேல்களில் தீப்பிடித்து பரவியது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் பஞ்சு பேல்கள், வேனின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.