திருச்சி, ஏப். 20: திருச்சியில் சாலையில் சென்றுகொண்டிருந்த மாநகராட்சி குப்பை வாகனம் திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
திருச்சி மரக்கடையில் இருந்து மாநகராட்சி குப்பை வாகனம் குப்பைகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகரிலுள்ள மாநகராட்சி உரம் தயாரிக்கும் மையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சென்றது. வாகனத்தை ஸ்ரீரங்கம் மேலூரைச் சோ்ந்த சிவகுமாா் (22) ஓட்டிச்சென்றாா்.
இந்நிலையில், திருவானைக்காவல் பாலத்தில் குப்பை வாகனம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென வாகனத்தில் தீப்பற்றியது. இதையடுத்து, ஓட்டுநா் சிவகுமாா் வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அதிலிருந்து கீழே இறங்கினாா்.
தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று குப்பை வாகனத்தில் பற்றிய தீயை அணைத்தனா். அதற்குள் வாகனத்தின் முன்பகுதி எரிந்து சேதமானது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

கம்பம் அரசு மருத்துவமனையில் பைக் எரிந்து சேதம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

