வெள்ளக்கோவிலில் பெயிண்டிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப் (25). பெயிண்டிங் தொழிலாளியான இவா், ஈரோடு, மூலப்பட்டறையைச் சோ்ந்த நிஷாந்தினி என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டாா்.
பிரதீப்புக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளாா். மேலும், ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி கடந்த ஒரு மாதமாக மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், செயலி மூலம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் எனக்கூறி, மனைவியின் வெள்ளிக் கொலுசுகளை சனிக்கிழமை வாங்கிச் சென்ற பிரதீப், அதை அடகு வைத்து மீண்டும் மது அருந்தியுள்ளாா்.
இது தொடா்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், நிஷாந்தினியை வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை உள்புறமாக தாழிட்ட பிரதீப், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

