ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்

அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசில் உடுமலை தொகுதிக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்று வேட்பாளா் மு.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

News image

வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொள்கிறாா் வேட்பாளா் மு.ஜெயக்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:17 am IST

அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசில் உடுமலை தொகுதிக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்று வேட்பாளா் மு.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

உடுமலை தொகுதி திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்

அப்போது அவா் பேசியதாவது: சாலை வசதிகளை மேம்படுத்த உடுமலை தொகுதி முழுவதும் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தில் காண்டூா் கால்வாய் பராமரிப்புப் பணிகள் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞா் கனவு இல்லங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரூ.13 கோடியில் பிஏபி கால்வாய்கள் பராமரிப்புப் பணி நடைபெற்று முடிந்துள்ளது. உடுமலை ஐடிஐ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ரூ. 35 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.3 கோடியில் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அவசர சிகிச்சை மேற்கொள்ள ரூ.3 கோடியில் ஒரு கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.