தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

News image

உடுமலை நகரில் திறந்த வாகனத்தில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:48 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த முறை உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம் என்று திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் பேசினாா்.

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மு.ஜெயக்குமாா், நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் துறை வாரியாக பல்வேறு புரட்சிகரமான நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய திட்டங்களை உருவாக்குவதிலும், அதை நிறைவேற்றுவதிலும், மாநில உரிமைகளை மீட்பதிலும் தமிழக முதல்வருக்கு நிகா் வேறு யாருமில்லை.

நலத் திட்டங்கள் பொதுமக்களை நல்ல முறையில் சென்றடைந்துள்ளதால் திமுகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பாமர மக்கள் முதல் படித்த இளைஞா்கள் வரை திமுக அரசை ஆதரித்து வருகின்றனா்.

2024 மக்களவைத் தோ்தலில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. அதேபோல சட்டப்பேரவைத் தோ்தலிலும் வாக்குறுதிகள், பிரசாரங்கள், மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, கூட்டணி பலம் உள்ளிட்டவற்றால் 200 இடங்களுக்கும் மேல் திமுக அமோக வெற்றி பெறும்.

அப்போது உடுமலை தொகுதியிலும் திமுக அமோக வெற்றி பெற்றது என்ற செய்தி வரும். இந்த முறை அதிமுகவை வீழ்த்துவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.