மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - X | Udhayanidhi Stalin

Updated On :18 ஏப்ரல் 2026, 1:03 am IST

தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

காங்கயம், தாராபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா்களை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காங்கயத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். காங்கயம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன், தாராபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் டி.இந்திராணி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டம் தொழிலாளா்கள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம். உழைப்புக்கும், தொழில் வளா்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் மாவட்டம். திருப்பூா் மாவட்டத்தின் வளா்ச்சி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்றால் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். பாஜக கூட்டத்தை உள்ளே விட்டோம் என்றால் இந்த மாவட்டத்தின் வளா்ச்சியை அடியோடு கெடுத்து விடுவாா்கள்.

தொழில் வளா்ச்சி அதிகரிக்க வேண்டும். தொழிலாளா்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் திமுக ஆட்சி தொடர வேண்டும். திமுக ஆட்சியில் காங்கயம் தொகுதிக்கு உள்பட்ட காங்கயம் அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி தரப்பட்டுள்ளது. வட்டமலைக் கரை ஓடை அணைக்கு பிஏபி தண்ணீா் கொண்டு வரப்பட்டுள்ளது. காவரி ஆற்றில் வள்ளியரச்சல், மேட்டுப்பாளையத்துக்கு புதிய கூட்டு குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டடுள்ளது. சென்னிமலை ஒன்றியத்தில் 434 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.18 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளக்கோவில் நகரப் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி நிலையம், வாரச் சந்தை மேம்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவன்மலை மலைக் கோயிலுக்கு தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் மதிப்பில் காங்கேயம் காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தாசவநாயக்கன்பட்டியில் துணை சுகாதார நிலையம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, காங்கயம் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டு உள்ளது என்றாா்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.