விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சரித்திர சாதனைகள் படைத்து வரும் திமுகவுக்கு வாக்களியுங்கள்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

சரித்திர சாதனைகளை படைத்து வரும் திமுக ஆட்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என மடத்துக்குளம் திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

News image

பூலாங்கிணறு கிராமத்தில் பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:37 am IST

சரித்திர சாதனைகளை படைத்து வரும் திமுக ஆட்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என மடத்துக்குளம் திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணனை ஆதரித்து முக்கோணம், பூலாங்கிணறு, கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் ஜெயராமகிருஷ்ணன் பேசியதாவது:

சாமானிய மக்கள் பயன்பெறும் விதத்தில் ஏராளமான நலத் திட்டங்களையும் ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக நிறைவேற்றி தமிழகத்தை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். எனவே திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

மேலும் தற்போதைய தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமான வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை, பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், முதியோருக்கு ஒய்வூதியமாக ரூ.2 ஆயிரம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறஇத்து கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த முறை மடத்துக்குளம் தொகுதியில் திமுக வெற்றி வாகை சூட வேண்டும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.