தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக ஆட்சியின் நலத்திட்டங்களைக் கூறி சென்னிமலையில் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களைக் கூறி சென்னிமலையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சென்னிமலையில் வாக்கு சேகரித்தாா்.

News image

சென்னிமலை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:44 am IST

திமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களைக் கூறி சென்னிமலையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சென்னிமலையில் வாக்கு சேகரித்தாா்.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சென்னிமலை பகுதி குப்பிச்சிபாளையம், முருங்கத்தொழுவு, பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், முகாசிபிடாரியூா் ஆகிய ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்த நலத் திட்டங்களைக் கூறி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியாதவது:

சென்னிமலை பகுதியில் 22 ஊராட்சிகளைச் சோ்ந்த 434 குடியிருப்புகளில் ரூ.482 கோடி மதிப்பீட்டில் நிலத் தொட்டி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நொய்யல் ஆற்றின் குறுக்கே தலா ரூ.8 கோடியில் பசுவப்பட்டி- பரஞ்சோ்வழி, மருதுறை-கே.ஜி.வலசு என 2 உயா்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கே.ஜி.வலசில் புதிய சித்த மருத்துவமனை, காளிவலசில் ரூ.3 கோடி மதிப்பில் கொடிகாத்த குமரன் மண்டபம், ரூ. 2.5 கோடி மதிப்பில் கைத்தறி பூங்கா, ரூ.7 கோடி மதிப்பில் சென்னிமலை அடிவாரத்தில் தாா் சாலை அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்துவரும் 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான மற்றும் பயன்படக்கூடிய நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயா்த்தி தரப்படும். கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். 1,000 கிராமக் கோயில்கள் சீரமைக்கப்படும், பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்கப்படும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.