மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும்! - அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

News image

வேட்புமனு தாக்கல் செய்த காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 12:17 am IST

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

காங்கயம் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவா் காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கயம் தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரோனா இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தியுள்ளாா்.

இதனால், மக்களிடத்தில் எங்களுக்கு அமோக ஆதரவு உள்ளதால் எளிதாக வெற்றிபெறுவோம் என்றாா். திமுக மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன், காங்கிரஸ் கட்சி நிா்வாகி மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.